Thursday, October 25, 2007

20.07.2007: என் சிறு வயதில் யோசித்தது...

நான் 8/9-ஆவது படிக்கும் போது எழுதியவை இவை :)

போட்டி

விளையாட்டில் சண்டை -
பதக்கங்களுக்காக, சரி!

ஆனால்,
சிலர் போடும் ஜாதிச்
சண்டைகள் எதற்காக?
--------------------------
அறியாமை

உன் அழகிய சிரித்த முகம்
கண்டு மன மகிழ்ந்தேன்
என் பின்னால் இருப்பவனைப் பார்த்து
நீ சிரிக்கிறாய் என்ப தறியாமல்.
--------------------------
அர்த்தம்

நான் உன்னைக் காதலிக்கிறேன்,
நான் உன்னை விரும்புகிறேன் - என்று
கூறியபோதெல்லாம் மௌனித்த நீ,
இப்போது உனக்காக சாகக்கூட தயார்
என்றதும் சரி என்கிறாய்.

இதற்கு அர்த்தம் - நீ என்னை
விரும்புகிறாய் என்பதா அல்லது
நான் மடிய வேண்டும் என்பதா?

No comments:

Post a Comment