Wednesday, January 16, 2008

17.09.2007: தலைப்பு என்னவாயிருக்கும்?

தலைப்பு என்னவாயிருக்கும், இதைப் படிக்கும்போது யூகிக்க முடிகிறதா என்று பாருங்கள். அதோடு இந்த கவிதையில் வேறு ஏதேனும் புதுமை புலப்படுகிறதா என்றும் யோசித்து வைத்துக் கொள்ளுங்கள். கவிதைக்கு கீழே தலைப்பையும், நான் புதுமை என்று எண்ணிச் செய்ததையும் சொல்லி இருக்கிறேன், பாருங்கள் :)

அவளுடைய நடை முன்
போல் நளினமாய் இல்லை
நன்றாகவே மாறியிருந்தது.
அவளுடைய உடையும் முன் போல்
கச்சிதமாக இல்லை - வெட வெடவென
சிக்கென்று இல்லாமல் பெரிதாக மாறியிருந்தது.
அவளுடைய எடையும் கூடி நிறைய மாறியிருந்தது.
அவளுடைய செயல்களில் இதற்கு முன்பு இருந்த
சுறுசுறுப்பு போய் சோம்பலாகவும் மாறியிருந்தது.
இப்படி அவளுடைய நடை உடை எடை செயல்
என அனைத்துமே மாறியிருந்தாலும் யாருக்கும்
அவள் மேல் கோபமோ வருத்தமோ இல்லை.
மாறாக அவள் மேல் கொண்ட மரியாதையும்
அன்பும் அனைவருக்கும் கூடியிருந்தது.
அவளுக்குள் மற்றுமொரு உயிரை
சுமந்து கொண்டிருக்கிறாள்
என்ற காரணத்தினால்.

தலைப்பு: கர்ப்பிணிப் பெண் / புள்ளதாச்சி பொம்பள
புதுமை அப்டினு நான் பண்ணதுங்கோஓஓஓ :) இந்த கவிதையை பார்த்தால் ஒரு புள்ளதாச்சியின் வயிறு மாதிரி இருக்கா? ஆமாம் அப்டினா நன்றிங்னா...இல்லைனா மறுக்கா கவிதையை நல்லா பாருங்னோவ்... :)

1 comment: