Thursday, January 31, 2008

31.01.2008: இதனால் தானோ??

இதனால் தானோ??

பீரோவின் திறந்த கதவு
மூடாமல் உனக்காக காத்து இருக்கும்!

நாங்கள் பேசும் சாதாரண விஷயங்களும்
அக்கணத்தில் ரகசிய சம்பாஷணைகளாகும்!

தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள்
யாவுமே ஊமைப் படங்களாகும்!

தேடித்தேடி வைத்த caller tune
எல்லாமே மௌன மொழி பேச ஆரம்பிக்கும்!

இப்படி நீ கண்ணயரும் பொழுதில்
யாவற்றையும் உன் வசப்படுத்தி வைப்பது

" நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே"
என்ற கடவுளின் கூற்றைப் போன்று இருப்பதால் தான்

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்களோ??

****** எங்களின் அதிதி குட்டிக்கு இந்த கவிதையை dedicate செய்கிறோம் :) ******

No comments:

Post a Comment