Monday, November 12, 2007

25.07.2007: யார் பற்றவைத்தது?

யார் பற்றவைத்தது?

கடல் கொந்தளித்தது

பூமிப் பாத்திரத்தைப் பற்ற வைத்தவர் யார்?

Thursday, October 25, 2007

25.07.2007: நான் கடவுள்!

நான் கடவுள்!

நானும் ஒரு
கடவுள் தான்!

உன்னைப் பார்த்த நாள் முதலாய்
உன்னுடைய நினைவன்றி யாவற்றையும் உதறியதால்
நான் ஒரு புத்தன் ஆனேன்...

ஒரு கன்னத்தில் நீ முத்தமிட்டதும்
மறு கன்னத்தை உனக்குக் காட்டியதால்
நான் ஏசு பிரான் ஆனேன்...

எனவே தான் சொல்கிறேன் - என்னவளே,
உன்னால் நானும் ஒரு கடவுள் தானடி!

20.07.2007: என் சிறு வயதில் யோசித்தது...

நான் 8/9-ஆவது படிக்கும் போது எழுதியவை இவை :)

போட்டி

விளையாட்டில் சண்டை -
பதக்கங்களுக்காக, சரி!

ஆனால்,
சிலர் போடும் ஜாதிச்
சண்டைகள் எதற்காக?
--------------------------
அறியாமை

உன் அழகிய சிரித்த முகம்
கண்டு மன மகிழ்ந்தேன்
என் பின்னால் இருப்பவனைப் பார்த்து
நீ சிரிக்கிறாய் என்ப தறியாமல்.
--------------------------
அர்த்தம்

நான் உன்னைக் காதலிக்கிறேன்,
நான் உன்னை விரும்புகிறேன் - என்று
கூறியபோதெல்லாம் மௌனித்த நீ,
இப்போது உனக்காக சாகக்கூட தயார்
என்றதும் சரி என்கிறாய்.

இதற்கு அர்த்தம் - நீ என்னை
விரும்புகிறாய் என்பதா அல்லது
நான் மடிய வேண்டும் என்பதா?

20.07.2007: முரண்

முரண்

தன் உடம்பை மிகவும்

வருத்தி நன்கு முறுக்கேற்றி

ஒரு வெறியோடு உழைத்து

போட்டியில் கலந்து கொண்டு

"ஆணழகன்" பட்டத்தை வென்றான்,

தன் தாய் மற்றவர்

முன்பு அவனைச் செல்லமாக

அழகா என்று கூப்பிட்டதற்கு

கோபித்துக் கொண்ட அவ்வீரன்!

Sunday, September 9, 2007

20.07.2007: சரியானவர்கள்...

எல்லோருக்குமே மற்றவர்கள் சரி இல்லை என்றும் தாங்கள் மட்டுமே சரியானவர்கள் என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது. இப்படி யோசித்தபோது உதித்தது இது :)

சரியானவர்கள்

நான் வண்டி ஓட்டும்போது
நடுவில் வந்த நாயைப்
பார்த்து அறிவு இல்லாம
படக் என்று வருகிறதே
என்று சொல்லிக் கொண்டேன்
எனக்கு நானே கோபத்தோடு,

மெதுவா பாத்து போவதற்கு
முடியாதா இவனுக்கு என்று
நாய் நினைப்பது தெரியாமல்!

26.10.2006:ஏதோ ஒரு சாதனை

கின்னஸ் சா(வே)தனை

பெண்ணே,
எனை நீ பிரிந்ததும்
என்னுயிர் நீங்கி வெறும் கூடானேன்.

நடமாடும் உயிரற்ற கூடு
என்றும் கின்னஸ் சாதனை
என்றும் என்னைப் புகழ்ந்தார்கள்.

உனை பிரிந்த வேதனையில் வாடும்
எனக்கு இது கின்னஸ் சாதனையா?

இல்லையடி என் உயிரே,
அது தீராத கின்னஸ் வேதனையடி!!!

26.10.2006: அப்பப்போ வருவது நல்லதுதான்...

தோற்பேனடி

தோற்பது -
எவருமே விரும்பாத,
வருத்தந் தரக்கூடியஒரு நிகழ்வு.

ஆனால்,
உன்னிடம் தோற்றாலோ
நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!

அதனால், கண்ணே
நான் மகிழ்ச்சியடைய
உன்னிடம்
மீண்டும் மீண்டும் தோற்பேனடி!!