Monday, January 28, 2008

18.09.2007: ஆட்டோக்கள் இல்லையோ?

ஆட்டோக்கள் இல்லையோ?

"பெண்ணின் திருமண வயது - 21" - என்ற
வரியைத் தாங்கிய ஆட்டோக்கள்
சில ஊர்களில் இல்லை போலும் -
இன்றும் இருக்கிறது குழந்தைத் திருமணம்!!!

18.09.2007 : இரவு

இரவு

பகலில் கொளுத்திய வெயிலில்
பூமி கருத்து விட்டதோ -
இரவின் வருகை!

Wednesday, January 16, 2008

17.09.2007: தலைப்பு என்னவாயிருக்கும்?

தலைப்பு என்னவாயிருக்கும், இதைப் படிக்கும்போது யூகிக்க முடிகிறதா என்று பாருங்கள். அதோடு இந்த கவிதையில் வேறு ஏதேனும் புதுமை புலப்படுகிறதா என்றும் யோசித்து வைத்துக் கொள்ளுங்கள். கவிதைக்கு கீழே தலைப்பையும், நான் புதுமை என்று எண்ணிச் செய்ததையும் சொல்லி இருக்கிறேன், பாருங்கள் :)

அவளுடைய நடை முன்
போல் நளினமாய் இல்லை
நன்றாகவே மாறியிருந்தது.
அவளுடைய உடையும் முன் போல்
கச்சிதமாக இல்லை - வெட வெடவென
சிக்கென்று இல்லாமல் பெரிதாக மாறியிருந்தது.
அவளுடைய எடையும் கூடி நிறைய மாறியிருந்தது.
அவளுடைய செயல்களில் இதற்கு முன்பு இருந்த
சுறுசுறுப்பு போய் சோம்பலாகவும் மாறியிருந்தது.
இப்படி அவளுடைய நடை உடை எடை செயல்
என அனைத்துமே மாறியிருந்தாலும் யாருக்கும்
அவள் மேல் கோபமோ வருத்தமோ இல்லை.
மாறாக அவள் மேல் கொண்ட மரியாதையும்
அன்பும் அனைவருக்கும் கூடியிருந்தது.
அவளுக்குள் மற்றுமொரு உயிரை
சுமந்து கொண்டிருக்கிறாள்
என்ற காரணத்தினால்.

தலைப்பு: கர்ப்பிணிப் பெண் / புள்ளதாச்சி பொம்பள
புதுமை அப்டினு நான் பண்ணதுங்கோஓஓஓ :) இந்த கவிதையை பார்த்தால் ஒரு புள்ளதாச்சியின் வயிறு மாதிரி இருக்கா? ஆமாம் அப்டினா நன்றிங்னா...இல்லைனா மறுக்கா கவிதையை நல்லா பாருங்னோவ்... :)

02.09.2007: நன்றாகத்தான்...

நன்றாகத்தான்...

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
அவளைச் சந்தித்ததில் இருந்து

பேசிப் பழகி பிடித்துப் போய்
நட்போடு காதலையும் வளர்த்து

அக்காதலை இருவரும்
பகிர்ந்து கொண்டு என்றும்,

நாங்கள் தான் உலகம்
என்று யாவற்றையும் மறந்து

கை கோர்த்துக் கொண்டு
ஊர்கோலம் போய்க் கொண்டு என்றும்,

எங்கள் பயணம் நன்றாகத்தான்
போய்க் கொண்டு இருந்தது...

நேரமாச்சு எழுந்திருடா என்று
அம்மா என்னை எழுப்பும் வரை!!!

Monday, November 12, 2007

25.07.2007: யார் பற்றவைத்தது?

யார் பற்றவைத்தது?

கடல் கொந்தளித்தது

பூமிப் பாத்திரத்தைப் பற்ற வைத்தவர் யார்?

Thursday, October 25, 2007

25.07.2007: நான் கடவுள்!

நான் கடவுள்!

நானும் ஒரு
கடவுள் தான்!

உன்னைப் பார்த்த நாள் முதலாய்
உன்னுடைய நினைவன்றி யாவற்றையும் உதறியதால்
நான் ஒரு புத்தன் ஆனேன்...

ஒரு கன்னத்தில் நீ முத்தமிட்டதும்
மறு கன்னத்தை உனக்குக் காட்டியதால்
நான் ஏசு பிரான் ஆனேன்...

எனவே தான் சொல்கிறேன் - என்னவளே,
உன்னால் நானும் ஒரு கடவுள் தானடி!

20.07.2007: என் சிறு வயதில் யோசித்தது...

நான் 8/9-ஆவது படிக்கும் போது எழுதியவை இவை :)

போட்டி

விளையாட்டில் சண்டை -
பதக்கங்களுக்காக, சரி!

ஆனால்,
சிலர் போடும் ஜாதிச்
சண்டைகள் எதற்காக?
--------------------------
அறியாமை

உன் அழகிய சிரித்த முகம்
கண்டு மன மகிழ்ந்தேன்
என் பின்னால் இருப்பவனைப் பார்த்து
நீ சிரிக்கிறாய் என்ப தறியாமல்.
--------------------------
அர்த்தம்

நான் உன்னைக் காதலிக்கிறேன்,
நான் உன்னை விரும்புகிறேன் - என்று
கூறியபோதெல்லாம் மௌனித்த நீ,
இப்போது உனக்காக சாகக்கூட தயார்
என்றதும் சரி என்கிறாய்.

இதற்கு அர்த்தம் - நீ என்னை
விரும்புகிறாய் என்பதா அல்லது
நான் மடிய வேண்டும் என்பதா?