Friday, July 13, 2007

28.04.2007: பொறுப்பு

பொறுப்பு

"இந்த போலீஸே வேஸ்ட் டா, டிராபிக்கை கன்ட்ரோல் பண்ணாம ரோட்டோரமா போய் சும்மா நின்னுட்டு கதை அடிச்சிட்டு இருக்காங்க" என்று தன் கோபத்தை எடுத்துரைத்தான் கோபி.
"கரெக்ட் டா மச்சான்,போலீஸ்னு இல்லை. எந்த இடம் போனாலும் ஒருத்தனும் வேலை செய்யற நேரத்துல வேலை பண்ணாம வெட்டியா இருக்காங்க" என்றான் மது. "வெளியில ஏண்டா போறீங்க. நம்ம வீட்டுல பாரு. நம்ம பொம்பளைங்க வீட்டு வேலையை விட சீரியல கட்டிட்டு அழறாங்களே, அத என்னனு சொல்லுவ?" என்றான் கண்ணன்.
இப்படி ஒருத்தரும் பொறுப்பில்லாமல் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பிய நண்பர்கள் கதைத்துக் கொண்டு இருந்தனர் அவர்களுடைய அலுவலக காபி பார்லரில்!

No comments:

Post a Comment